தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்

வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்

வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்


ADDED : டிச 09, 2025 10:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2025 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே பெரிய கொடிவேரி, சென்றாயம்-பாளையம் கிராமத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தலித் விவசாய கூலி தொழி-லாளர்களுக்கு நிலம் வழங்கி, பட்டா இருந்தும், அதற்கான ஆவணத்தில் பட்டா ரத்து செய்யப்பட்-டுள்ளது.

மீண்டும் பட்டதாரர்களுக்கு பட்டா வழங்க கோரியும், கோபி தாலுகாவில் பஞ்சமி நிலங்-களை மீட்டு, வீடு இல்லாத தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி, விடு-தலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் அம்பேத்கர் தலைமையில், கோபி தாலுகா ஆபீசில் நேற்று மதியம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us