/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாக்கடை பிரச்னைக்கு தீர்வு கேட்டு மறியல்
/
சாக்கடை பிரச்னைக்கு தீர்வு கேட்டு மறியல்
ADDED : அக் 15, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கவுந்தப்பாடி பஞ்., பழனிச்சாமி வீதி, முதலியார் வீதி மற்றும் நல்லாகவுண்டனுாரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் சாக்கடையில் கழிவு நீர் வெளியேறாததை கண்டித்து, கவுந்தப்பாடி-ஆப்பக்கூடல் சாலையில், 60க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், கவுந்தப்பாடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கவே அனைவரும் கலைந்து சென்றனர்.