ADDED : ஜூலை 06, 2025 01:34 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில், காவல் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து, மருத்துவ நிவாரணத்தொகை, ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி மாவட்டத்தை சேர்ந்த, 15 பேருக்கு மருத்துவ நிவாரண தொகையாக, 4 லட்சம் ரூபாய், ஈமச்சடங்கு தொகை, 22 பேருக்கு தலா, 20,000 ரூபாய் வீதம், 4.40 லட்சம் ரூபாயை எஸ்.பி., சுஜாதா, காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் வழங்கினார்.
