ADDED : ஆக 30, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
டவுன் அக்ரஹார வீதி பாதராஜ மடத்தில் (முளுபாகல் மடம்) ராகவேந்திர
சுவாமிகளின், 355வது ஆராதனை மஹோத்சவம் நேற்று காலை கணபதி
ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்ஜய
ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடந்தது. மாலையில் விசேஷ பாராயணம்
நடந்தது.
இன்று காலை, 9:00 மணிக்கு ராகவேந்திர ஸ்வாமி ஸ்தோத்திர
ஹோமம் நடக்கிறது. 11:00 மணிக்கு துலா பார உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை பாதராஜ மடத்தினர் செய்துள்ளனர்.
