/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே ஊழியர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
/
ரயில்வே ஊழியர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 03, 2026 07:20 AM
ஈரோடு: சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.,) சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ரயில் டிரைவர் பிரிவின் கிளை செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். துணை செயலாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார்.
எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.
அதுவரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ரயில்வேயில் உள்ள, 2.50 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ரயில் டிரைவர்கள், 36 மணி நேரத்திற்குள் தலைமையிடத்துக்கு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரு நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் டீசல், எலக்ட்ரிக்கல் ரயில்வே பணிமனை உட்பட அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், எஸ்.ஆர்.எம்.யு., சங்கம் சார்பில் எட்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

