ADDED : அக் 21, 2024 07:21 AM
அ நிறம் | அளவு
கொடுமுடி: கொடுமுடி நகருக்குள் உள்ள மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கடைகள் உள்ளிட்டவற்றுக்கு பெரும்பாலான மக்கள் தெற்கு ரயில்வே கேட் வழியாக செல்வர்.
பராமரிப்பு பணிக்காக காரணமாக கடந்த, ௧௯ம் தேதி கேட் மூடப்பட்டது. நாளை வரை கேட் மூடப்பட்டிருக்கும். மக்கள் ரயில்வே நுழைவு பாலத்தை மாற்று ஏற்பாடாக பயன் படுத்திக்கொள்ளலாம் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
