ADDED : ஜன 06, 2026 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்த கோரி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். அங்கிருந்து கோஷமிட்டபடி, ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிட முயன்ற, 39 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

