ADDED : செப் 13, 2026 07:04 AM
பவானி:அம்மாபேட்டை
மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பூதப்பாடி, சிங்கம்பேட்டை,
பூனாட்சி, ஊமாரெட்டியூர் பகுதிகளில், நேற்று மாலை, 4:30 மணிக்கு
தொடங்கிய மழை, 5:30 மணி வரை பெய்தது.
மழையால்
அம்மாபேட்டை-அந்தியூர் சாலை அண்ணாநகரில் சாலையோர வேப்பமரம்
முறிந்து சாலையில் விழுந்தது. அம்மாபேட்டை போலீசார் மற்றும் அந்தியூர்
தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணிநேரம் பேராாடி மரத்தை
அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
* பர்கூர் மலை மற்றும் ஊசிமலை,
துருஷ்ணாம்பாளையம், தட்டக்கரை, தாமரைக்கரை சுற்று வட்டார
பகுதிகளில் நேற்று மதியம், 2:30 மணிக்கு தொடங்கிய மிதமான மழை, ஒன்றரை
மணி நேரம் இடைவிடாமல் பெய்தது.
இதேபோல் அந்தியூர் மற்றும் சுற்று
வட்டார பகுதிகளான மைக்கேல்பாளையம், சங்கராப்பாளையம், மந்தை,
வட்டக்காடு, பிரம்மதேசம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில், மாலை,
5:30 மணிக்கு தொடங்கிய மிதமான மழை அரை மணி நேரம் கொட்டி தீர்த்தது.
