sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடுமுடி, சத்தியில் மழை தாராபுரத்திலும் கொட்டியது

/

கொடுமுடி, சத்தியில் மழை தாராபுரத்திலும் கொட்டியது

கொடுமுடி, சத்தியில் மழை தாராபுரத்திலும் கொட்டியது

கொடுமுடி, சத்தியில் மழை தாராபுரத்திலும் கொட்டியது


ADDED : அக் 10, 2025 01:36 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நேற்று மாலை, 6:45 மணியளவில் திடீரென மழை பெய்ய துவங்கியது. அதேவேகத்தில், 45 நிமிடங்கள் கொட்டி தீர்த்தது. மழை துவங்கிய சில நிமிடங்களில் மின்தடை ஏற்பட்டது.

மழை முடிந்து இரவு, 9:00 மணி வரையிலும், மின் சப்ளை கிடைக்கவில்லை. இதனால் மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். கொடுமுடி ராசாம்பாளையத்தில் இடி-மின்னல் தாக்கி இரு தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது.

* சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சிவியார்பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, கே.என்.பாளையம், தாசரி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு, 8:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இடி-மின்னலுடன் மிதமாக வெகு நேரம் பெய்தது.

* ஈரோடு மாநகரில் நேற்றிரவு, 9:௦௦ மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. வீரப்பன்சத்திரம், சம்பத்நகர், சூளை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான வேகத்தில் தொடங்கிய மழை, ௧௦ நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அதேசமயம் ப.செ.பார்க், வெட்டுக்காட்டு வலசு, பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான துாறலுடன் நின்றது.

தாராபுரத்தில்...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் நேற்றிரவு, 7:00 மணியளவில், துாறலுடன் துவங்கிய மழை, சில நிமிடங்களில் கன மழையாகி வெளுத்து வாங்கியது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால், வசந்தா ரோடு, பூக்கடை கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது.






      Dinamalar
      Follow us