ADDED : ஜூலை 12, 2025 01:11 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,:ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் மாலை, அரை மணி நேரம் மழை பெய்தது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் மதியம், 2:50 மணிக்கு வானம் இருண்டு, லேசான சாரல் மழை பெய்ததது.
பன்னீர்செல்வம் பார்க், மேட்டூர் ரோடு, நசியனுார் ரோடு, வெட்டுக்காட்டுவலசு, பெருந்துறை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கனமாக பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் துாறலோடு, 10 நிமிடத்தில் நின்றது. இதனால் மாநகர மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
