ADDED : செப் 14, 2026 06:41 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சாஸ்திரி நகரை சேர்ந்த கிருஷ்ணன் வீட்டில், பாம்பு நடமாட்டம்
இருப்பதாக கிடைத்த தகவலின்படி, பாம்பு பிடி வீரர் முருகன் சென்றார்.
தோட்டத்தில் 2 அடி நீள மண்ணுளி பாம்பு இருந்தது.
லாவகமாக பிடித்து
வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார். மண்ணுளி பாம்பில் இருவகை
உள்ளது. ஒரு வகை மண் புழு போல போன்றது, மற்றொன்று மலைப்பாம்பு போன்று
இருக்கும். இது அரிய வகையாகும். இந்த வகையான பாம்புதான், கிருஷ்ணன்
தோட்டத்தில் சிக்கியதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
