நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் அரிசி
பறிமுதல்
ஈரோடு, நவ. 27-
ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா, எஸ்.ஐ., மேனகா தலைமையிலான போலீசார், ஊராட்சிக்கோட்டை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஒரு மாருதி காரை சோதனை செய்ததில், 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. காரை ஓட்டி வந்த அந்தியூர், கேசரிமங்கலத்தை சேர்ந்த சக்திவேல், 41, என்பவரை கைது செய்தனர். காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.