/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷன் அரிசி கடத்தியவர் வாகனத்துடன் கைது
/
ரேஷன் அரிசி கடத்தியவர் வாகனத்துடன் கைது
ADDED : டிச 04, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் அரிசி கடத்தியவர்
வாகனத்துடன் கைது
ஈரோடு, டிச. 4-
ஈரோடு, மூலப்பாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் இரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த சிறிய சரக்கு வாகனத்தில், 1,075 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வாகனத்தை ஓட்டி வந்த வெண்டிபாளையத்தை சேர்ந்த அர்த்தநாரீஸ்வரன், 40, என்பவரை கைது செய்தனர். ரேஷன் அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மழைக்