/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷன் கடை ஊழியர் வேலை நிறுத்தம் துவக்கம்
/
ரேஷன் கடை ஊழியர் வேலை நிறுத்தம் துவக்கம்
ADDED : அக் 22, 2024 01:30 AM
ரேஷன் கடை ஊழியர் வேலை நிறுத்தம் துவக்கம்
ஈரோடு, அக். 22-
தமிழக அளவில் உள்ள, 30,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், 25,000க்கும் மேற்பட்ட விற்பனையாளர், கட்டுனர் பணி செய்கின்றனர். இந்நிலையில் கடைகளில் இருப்பு குறைவு, அதிகம், போலி பில் கண்டறியப்பட்டால் பணியாளருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை, 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும். மேலும் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய, குறியீடு நிர்ணயம் செய்வதை தவிர்க்க வேண்டும். காலாவதி பொருளை, அந்நிறுவனமே திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் தொடர் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஈரோடு மாவட்ட அளவில், 760 பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

