ரேஷன் கடைகளில் இன்று முகாம் இ-கே.ஒய்.சி., பதிவுக்கு அழைப்பு
ரேஷன் கடைகளில் இன்று முகாம் இ-கே.ஒய்.சி., பதிவுக்கு அழைப்பு
ADDED : ஆக 29, 2026 06:50 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழகம்
முழுவதும், ரேஷன் கடைகளில் கை விரல் ரேகை பதிவு, கண் கருவிழி சரி
பார்ப்பு எனும் 'இ-கே.ஒய்.சி.,' மேற்கொள்ளாத அனைத்து ரேஷன்
கார்டுதாரர் பயனாளிகளுக்காக கடந்த, 2, 8, 9 ஆகிய நாட்களில் அனைத்து
ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடந்தது.
அன்று விற்பனை முனைய
இயந்திரம் மூலம் விரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம்
இ-கே.ஒய்.சி., பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிவை, 100 சதவீதம்
நிறைவு செய்யும் வகையில் இன்று (29) அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு
முகாம் நடக்கிறது. கைவிரல் ரேகை பதிவு மேற்கொள்ளதா 'PHH-AYY, PHH --
NPHH' ரேஷன் கார்டுதாரர்கள், கைவிரல் ரேகை பதிவு செய்து பயன் பெறலாம்.
.
