/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாரியம்மன் கோவிலில் புனரமைப்பு தொடக்கம்
/
மாரியம்மன் கோவிலில் புனரமைப்பு தொடக்கம்
ADDED : பிப் 07, 2026 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர்: பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் மாரியம்மன் கோவில் கூரை சேதமடைந்தது. ஊர்மக்கள் எடுத்த முயற்சியின் பலனாக, கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி சிலைகளை நேற்று இடமாற்றம் செய்வதற்கான பாலாலய பூஜை நடந்தது.
ஊர் பிரமுகர்கள் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை சத்தி சரக ஆய்வர் சங்கர கோமதி, பவானீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் மக்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவிலில் புனரமைப்பு பணி நடக்கும் என்று, இந்து சமய அறநிலைத்துறையினர் தெரிவித்தனர்.

