குடியிருப்பு பகுதி பாதுகாப்பிற்கு 'சிசிடிவி' பொருத்த கோரிக்கை
குடியிருப்பு பகுதி பாதுகாப்பிற்கு 'சிசிடிவி' பொருத்த கோரிக்கை
ADDED : மார் 08, 2026 06:43 AM
பள்ளிப்பாளையம்:காவிரி
சுற்றுவட்டார குடியிருப்பு பகுதி பாதுகாப்பிற்கு, 'சிசிடிவி'
கேமரா பொருத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் அருகே, காவிரி
பகுதியில் சுற்றிலும் ஏராள-மான குடியிருப்புகள் உள்ளன. இந்த
குடியிருப்பு பகுதியில், கடந்த சில மாதங்களாக இரவில் அடையாளம்
தெரியாத நபர்-களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், திருட்டு,
வழிப்-பறி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெண்களுக்கு
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு
பகு-தியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், ஏதாவது குற்றச்செ-யல்கள்
நடந்தால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகி-றது. சீக்கில்
ஏற்படும்.
எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி, காவிரி சுற்று வட்டார
குடி-யிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்க, பள்ளிப்பா-ளையம்
போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
