ADDED : நவ 29, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை
கோபி, நவ. 29-
கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை மூலம், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரண்டு பாசனங்களுக்கும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நீர் திறக்க கோரி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் சுபிதளபதி, பவானிசாகர் அணை செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பவானிசாகர் அணை நீர்மட்டம், 97 அடியாக உள்ளது. டிச., மாதம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், கொடிவேரி அணை பாசனத்துக்கு டிச.,5ம் தேதி முதல் நீர் திறக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.