sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம்

/

விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம்

விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம்

விசைத்தறி கூடங்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம்


ADDED : பிப் 10, 2025 02:01 AM

Google News

ADDED : பிப் 10, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு; தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார். இதில் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

விசைத்தறிகளில் இருந்து வெளிப்படும் ஒலியை சப்த மாசாக கருதி பிப்.2ல் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்புக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கூட்டமைப்பின் கருத்து கேட்ட பிறகே தீர்வு காண வேண்டும்.

விசைத்தறிகளை நாடா இல்லாத நவீனமயமாக்கப்பட்ட தறிகளாக மாற்றுவதற்கு, 50 சதவீத மானியத்தை மத்திய அரசும், 50 சதவீத மானியத்தை மாநில அரசும் வழங்கி விசைத்தறிகளை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளை முன் எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் மின் மானியத்தில் பயனாளியாக இயங்கும் அனைத்து விசைத்தறி கூடங்களுக்கும், உயர்த்தப்பட்ட சொத்து வரியில் இருந்து விலக்களித்து, விசைத்தறிகளை அரசு காக்க வேண்டும். வரும் ஆண்டு இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி திட்டத்தை ஜூன் மாதமே துவங்க வேண்டும். காட்டன் நுாலையே சேலை உற்பத்திக்கான பாவு நுாலாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us