ADDED : டிச 27, 2024 01:32 AM
அ நிறம் | அளவு
பணி நிரந்தரம் கோரி தீர்மானம்
ஈரோடு, டிச. 27-
தமிழ்நாடு துாய்மை பணியாளர் சங்கம் சார்பில், நேற்று ஈரோடு மார்க்கெட் டிவிஷன் அலுவலகத்தில் சங்க தலைவர் சண்முகம் வாயிற்கூட்டம் நடத்தினார். மாநகராட்சி தொழிலாளர்களிடம் பிரச்னைகளை தீர்ப்பதற்கான ஆலோசனை, 2021ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் முதல்வர் அறிவித்தபடி, 10 ஆண்டு பணி முடித்த மாநகராட்சி பணியாளர்கள் அனைவரையம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட தலைவர் சோமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
