ADDED : மே 01, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:சித்தோடு
அருகேயுள்ள நரிப்பள்ளம் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட
குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த சில
நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநகராட்சி
அலுவலகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட
மக்கள், ஈரோடு சாலையில் நரிப்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில்
ஈடுபட்டனர். சித்தோடு போலீசார் சமாதானத்ைத தொடர்ந்து கலைந்து
சென்றனர். மறியலால் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.