ADDED : பிப் 28, 2026 09:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி யூனியனுக்கு உட்பட்ட திங்களூர் பஞ்., சிக்கனந்தி, டி.பி.தொட்டி, என்.எஸ்.புரம் பகுதி மக்களுக்கு ஒரு மாதமாக குடிநீர் சரிவர வர-வில்லை. இதுபற்றி பஞ்., நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் இப்-பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை, 9:30 மணியளவில், அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து, காலி குடங்களுடன் கடம்பூர் சாலையில் பாசக்குட்டை பிரிவில் சாலை மறி-யலில் ஈடுபட்டனர். தாளவாடி வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கடம்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி-யளிக்கவே, மதியம், 2:45 மணிக்கு மறியலை கைவிட்டனர். சாலை மறியலால், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

