ADDED : செப் 22, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, நெடுஞ்சாலை துறை உட்கோட்டம் சார்பில், பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி ஈரோடு ரிங் ரோடு, கனகபுரம், லக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் மண் சரிந்த இடங்கள் சீரமைப்பு, மேடு - பள்ளங்கள் சீரமைப்பு, பாலம் உட்பட திருப்பங்களில் உரிய வர்ணம் பூசுதல், எச்சரிக்கை பலகைகளில் வர்ணம் புதுப்பித்தல் போன்ற பணி நடந்து வருகிறது.* கொடுமுடி நெடுஞ்சாலைத்துறை சார்பில், கருமாண்டம்பாளையம், சாலைப்புதுாரில் சாலையோர பள்ளம், வெடிப்புகளை சீரமைக்கும் பணியில், சாலைப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.