ADDED : அக் 17, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை பணியாளர் போராட்டம்
தாராபுரம், அக். 17-
நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில், தாராபுரத்தில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டத் தலைவர் வெங்கடசாமி தலைமை வகித்தார். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.