/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
கொடுமுடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : டிச 05, 2024 07:35 AM
கொடுமுடி: கொடுமுடியில், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று துவங்கியது.கொடுமுடியில், நீர்நிலை மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு ஈரோடு கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை, நீர்வ-ளத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை, 90
நாட்களுக்குள் அகற்ற கடந்த ஜன.,2ல், உத்தரவிட்டது. இதைய-டுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் ரயில்வே
ஸ்டேஷன் ரோடு, மணிக்கூண்டு, கடைவீதி பகுதியில் பொக்லைன் இயந்திரம் கொண்டு, சாலையில் இருந்த
ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை அகற்றினர்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' உயர்நீதிமன்ற உத்தரவுபடி, சாலை
ஆக்கிரமிப்புகளை அகற்ற நட-வடிக்கை மேற்கொண்டுள்ளோம். அதன்படி, வருவாய் துறையின் சர்வே ரிப்போர்ட்
கிடைத்தவுடன், பழைய ஈரோடு - கரூர் சாலை மற்றும் பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள
ஆக்கிரமிப்-புகள் அகற்றப்படும்,' என்றனர். கொடுமுடி இன்ஸ்பெக்டர் சர-வணன் தலைமையில், போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்-டனர்.