ADDED : செப் 27, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேவல் சூதாட்டம்; மூவர் கைது
காங்கேயம், செப். 27-
காங்கேயம் அருகே ஊதியூரில், ஊதியூர் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஊஞ்சதோட்டம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கொடுவாய் நகராஜ், 42; காடையூர் விஜயகுமார், 37; நிழலி சாமிக்கண்ணு, 35, ஆகியோரை கைது செய்தனர். இரு சேவல், மூன்று டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

