/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை
/
பண்ணாரி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை
ADDED : ஆக 08, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணும் பணி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் நேற்று நடைபெற்றது.
அதில், 1 கோடியே, இரண்டு லட்சத்து, 79 ஆயிரத்து, 201 ரூபாய், தங்கம் 228 கிராம், வெள்ளி, 1,229 கிராமை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், பரம்பரை அறங்காவலர்கள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து
கொண்டனர்.