ADDED : மார் 29, 2026 02:31 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ரவிக்குமார், 63; இவர் மனைவி அமுதா. ஈரோடு மூலப்பாளையத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அக்கு பஞ்சர் சிகிச்சை பெற, ஸ்கார்பியோ காரில், இருவரும் நேற்று முன்தினம் வந்தனர்.
மணிக்கூண்டு பஸ் நிறுத்தம் அருகில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அவரிடம், 1.50 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லை. மனைவி மருத்துவ சிகிச்சைக்கான பணம் என்று கூறியும், பறிமுதல் செய்தனர்.
