/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லேத் பட்டறைக்காரரிடம் ரூ.1.80 லட்சம் பறிமுதல்
/
லேத் பட்டறைக்காரரிடம் ரூ.1.80 லட்சம் பறிமுதல்
ADDED : ஜன 11, 2025 02:36 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நிலை கண்கா-ணிப்பு குழு அதிகாரிகள், ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்-டானா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
ஈரோடு, பெருந்துறை சாலை பகுதியை சேர்ந்த சண்முகம் காரில் வந்தார். லேத் பட்டறை நடத்தி வருகிறார். காரை நிறுத்தி சோதனையிட்ட-போது, 1.80 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்துக்கான ஆவ-ணங்கள் ஏதுமில்லை. இதனால் பணத்தை பறிமுதல் செய்த குழு-வினர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்து கருவூலத்தில் செலுத்தினர்.அதிகாரிகளிடம் சண்முகம் கூறுகையில், ''ஒரு இடம் வாங்குவ-தற்கு முன்பணம் வழங்குவதற்காக, 1.80 லட்சம் ரூபாயை எடுத்து சென்றதாகவும், உரிய ஆவணங்களை சமர்பித்து பெற்றுக் கொள்கிறேன்,'' என்று தெரிவித்து சென்றார்.