ADDED : மார் 27, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:திருப்பூர்
மாவட்டம் காங்கேயம் சட்டசபை தொகுதி, தேர்தல் கண்காணிப்பு குழுவினர்,
நத்தகாடையூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஈரோடு
மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி,
பழனியில் பள்ளியில் படிக்கும் தனது மகனின் படிப்பு செலவுக்கு, 82 ஆயிரம்
ரூபாய் கொண்டு சென்றார். உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.
இதேபோல்
முத்துார்-கொடுமுடி ரோட்டில், மொடக்குறிச்சியை சேர்ந்த
பழனிச்சாமியிடம், உரிய ஆவணம் இல்லாததால், ஒரு லட்சம் ரூபாய்
பறிமுதல் செய்யப்பட்டது.
