ADDED : ஏப் 19, 2026 05:32 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 1.97 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருந்தனர். அந்தியூர் சட்டசபை தொகுதியில் ஒருவரிடம், 3.50 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
இத்துடன் சேர்த்து, 2 கோடியே, 48,870 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்களை வழங்கியதன் அடிப்படையில், 1 கோடியே, 92 லட்சத்து, 56,770 ரூபாயை ஒப்படைத்தனர்.
