ADDED : ஜூலை 10, 2026 12:25 AM
ஈரோடு: தமிழ்நாடு தொடக்க கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தங்கவேல், அரசுக்கு விடுத்த கோரிக்கை:
தமிழகத்தில், இந்தாண்டு அனைவரும் விரும்பி உபயோகிக்கும் விதமாக, தனியார் உற்பத்தி செய்வது போல, கரை போட்ட, நான்கு முழம் வேட்டிகளை தரமாக உற்பத்தி செய்யவும், சேலைகளில் ஜரிகை பார்டர்கள் வைத்து, உற்பத்தி செய்யவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கலின் போது, புதிய வடிவில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவதை மக்கள் வரவேற்றுள்ளனர். இதன் வாயிலாக கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கூடுதலான வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேநேரம், கடந்த ஆட்சியில் நெசவாளர்களுக்கு நெசவு கூலித்தொகை, 80 கோடி ரூபாய் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதை முழுமையாக விடுவித்தால், லட்சக்கணக்கான நெசவாளர்கள் வாழ்வாதாரம் பெறுவர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
