நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ., என இருவர் இடமாற்றம் செய்-யப்பட்டுள்ளனர்.
ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பிரபு, கடந்த ஜனவரியில் கோபியை அடுத்த பாரியூர் கோவில் விழா பாதுகாப்புக்கு சென்றார்.
அப்போது மது போதையில் பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் சென்றார். இதனால் ஈரோடு ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், துறை ரீதியான விசாரணைக்கு பின் சத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் சத்தி எஸ்.ஐ., மணிவேல், பணியில் அஜாக்கிரதையாக இருந்ததால், ஊட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

