/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாய்மை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
துாய்மை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 15, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழ்நாடு துாய்மை பணியாளர் சங்கத்தினர், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
சென்னை மாநகராட்சியில் துாய்மை பணியை, தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட மாநகராட்சி துாய்மை பணியாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.