ADDED : மார் 10, 2024 03:45 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே, சருகு மானை வேட்டையாடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட, சேசன் நகர் பகுதியில் மர்ம நபர்கள் வன விலங்கு வேட்டையில் ஈடுபடுவதாக வந்த தகவல்படி, நேற்று அதிகாலை தாளவாடி வனச்சரகர் சதீஸ் மற்றும் தாளவாடி போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது இவர்களை பார்த்ததும், மூன்று பேர் ஓடினர்.
அதில் இருவரை பிடித்து விசாரணை செய்த போது, சேசன்நகரை சேர்ந்த கவுசர் அகமது, கர்நாடகாவை சேர்ந்த லோக்கி என்பதும், நாட்டுத்துப்பாக்கி மூலம் சருகு மானை வேட்டையாடியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து சருகு மான், நாட்டுத்துப்பாக்கி, வெடி மருந்துகள், கத்திகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
