sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சஷ்டி விழா திருக்கல்யாண வைபோகம் முருகப்பெருமான் கோவில்களில் கோலாகலம்

/

சஷ்டி விழா திருக்கல்யாண வைபோகம் முருகப்பெருமான் கோவில்களில் கோலாகலம்

சஷ்டி விழா திருக்கல்யாண வைபோகம் முருகப்பெருமான் கோவில்களில் கோலாகலம்

சஷ்டி விழா திருக்கல்யாண வைபோகம் முருகப்பெருமான் கோவில்களில் கோலாகலம்


ADDED : அக் 29, 2025 01:04 AM

Google News

ADDED : அக் 29, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, கந்தர் சஷ்டி விழா நிறைவாக, முருகப்பெருமான் ஆலயங்களில், திருக்கல்யாண வைபோகம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முருகப்பெருமானின் உகந்த விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி விழா, தமிழகத்தில் அனைத்து முருகன் ஆலயங்களிலும் கடந்த, ௨௨ம் தேதி தொடங்கியது. இதன்படி சென்னிமலை மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலிலும் வழக்கமான உற்சாகத்துடன் விழா ஆரம்பித்தது. சஷ்டி நிகழ்வின் உச்சபட்ச நிகழ்வான சூரசம்ஹாரம், சென்னிமலையின் நான்கு ராஜவீதிகளில், நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் கடலில், அரோகரா கோஷம் முழங்க, பரவசத்துடன் நடந்தேறியது. விழா நிறைவாக திருக்கல்யாண வைபோவம் நேற்று நடந்தது.

சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் காலை, 10:௦௦ மணிக்கு, சுப்பிரமணிய பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மணமேடையில் தலைமை குருக்கள் ராமநாதசிவச்சாரியார் தெய்வயானைக்கு மங்கள நாண் அணிவித்தார். இதை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.

திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் எழுதினர். இதில் ஒரு லட்சத்து, 72,418 ரூபாய் வசூலானது. அதேசமயம் காப்பு கட்டி சஷ்டி விரதம் தொடங்கிய ஆயிரக்கணக்கான பக்தர்களும் காப்பை கழற்றி, விரதத்தை நிறைவு செய்தனர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் திண்டல் மலை வேலாயுதசுவாமி கோவில், வானி கூடுதுறை ஆறுமுகன் கோவில், ஆப்பக்கூடல் கணேச பாலதண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில், பச்சைமலை முருகன் கோவில், புன்செய்புளியம்பட்டி சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இந்நிகழ்வால் முருகப்பெருமான் கோவில்கள் விழாக்கோலம் பூண்டன.






      Dinamalar
      Follow us