ADDED : மார் 25, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா பின்புறம் செயல்படும் டாஸ்மாக் கடையில் (எண்-3583), உரிய அனுமதி பெறாமல் பார் செயல்பட்டதை, மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் சோதனையில் தெரிய வந்தது.
இதனால் பாரை மூடி சீல் வைக்க வருவாய் துறைக்கு பரிந்துரைத்தார். இதை தொடர்ந்து வருவாய் துறையினர் ஆய்வு செய்து, பாருக்கு 'சீல்' வைத்தனர். இதேபோல் கருங்கல்பாளையம் கமலா நகரில், ஒரு பெட்டிக்கடையில் மது விற்றதாக புகார் எழுந்தது. போலீசார் ஆய்வில் புகார் உறுதி செய்யப்பட்டதால், கடைக்கு 'சீல்' வைத்தனர்.

