sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இடைநிலை ஆசிரியர்கள் பேட்ச் அணிந்து போராட்டம்

/

இடைநிலை ஆசிரியர்கள் பேட்ச் அணிந்து போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் பேட்ச் அணிந்து போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் பேட்ச் அணிந்து போராட்டம்


ADDED : டிச 03, 2025 07:35 AM

Google News

ADDED : டிச 03, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை:தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 2012ல் பணிக்கு சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக, 5,200 ரூபாய் வழங்கப்படுகிறது.

அதேசமயம், 2009ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு, 8,370 ரூபாய் தரப்படுகிறது. அவர்களைப் போல் தங்களுக்கும் ஊதியம் வழங்க கோரி, கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், 2021ல் தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில், சம வேலைக்கு சம ஊதியம் தருவதாக கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்தும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், நேற்று முதல் கோரிக்கை அட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதன்படி சென்னிமலை ஒன்றிய அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். வரும், 5ம் தேதி சென்னையில், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் குடும்பத்துடன் கோட்டையை நோக்கி பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us