ADDED : செப் 20, 2026 06:50 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பள்ளிக்கல்வித்துறையில்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை
மாற்றப்படுகின்றனர். இதன்படி ஈரோடு காமராஜர் வீதி மாநகராட்சி
தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு
நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர், சுய உதவிக் குழு
உறுப்பினர், முன்னாள் மாணவர், முன்னாள் மாணவர்ளின் பெற்றோர், மகளிர் சுய
உதவிக்குழுவை சேர்ந்தவர் என, 24 உறுப்பினர்கள் தேர்வு
செய்யப்பட்டனர். தலைவராக பள்ளி மாணவியின் பெற்றோரான சங்கீதாவை
உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்வு செய்தனர். குழுவின் நோக்கம் குறித்து
பள்ளியின் தலைமையாசிரியை மோகனாம்பாள் விளக்கினார்.
