/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மா.திறனாளிகளுக்கு சேவை மையம் திறப்பு
/
மா.திறனாளிகளுக்கு சேவை மையம் திறப்பு
ADDED : பிப் 17, 2026 06:49 AM
ஈரோடு; ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளி-களுக்கான கோட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு சேவை மையத்தை, கலெக்டர் கந்த-சாமி நேற்று திறந்து வைத்தார். இங்கு சிறப்புக்-கல்வி, பேச்சு மற்றும் மொழி தெரபி, பார்வை குறைபாடு கண்டறிதல், பிசியோதெரபி, உள-வியல் ஆலோசனை, செவித்திறன் குறைபாடு கண்டறியும் சேவை வழங்கப்படும். அனைத்து அரசு நலத்திட்ட உதவி பெறவும் இம்மையங்-களில் வழிவகை செய்யப்படும் என்று, கலெக்டர் தெரிவித்தார்.
* நம்பியூரில், நம்பியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார வளாகத்தில், மாற்றுத்திறனாளி-களுக்கான சேவை மையம் திறக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் குத்து விளக்கேற்றி பேசினார்.

