ADDED : ஜூலை 15, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், வயலுாரில். சாக்கடை கழிவுநீர் அகற்றும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வயலுார், கோடங்கிப்பட்டி ஆகிய இடங்களில் மக்கள் வசிக்கின்றனர்.
மழைநீர் செல்லும் வகையில் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, பஞ்சாயத்தில் உள்ள துாய்மை பணியாளர்களை கொண்டு சாக்கடை கழிவுநீரில் தேங்கிய கழிவுகள், செடிகள், மண் திட்டுகள் முழுமையாக அகற்றப்பட்டன. மேலும் துாய்மை பணி நடந்த இடங்களில் பிளிச்சீங் பவுடர் தெளிப்பு நடந்தது.