ADDED : மார் 15, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சி.ஏ.ஏ., சட்டத்தை திரும்ப
பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு: இந்திய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், என வலியுறுத்தி, ஈரோட்டில் காளை மாட்டு சிலை அருகில், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட உதவி தலைவர் அன்பு ஜனாதிபதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாநில பொருளாளர் பாரதி, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் நவீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநகரில் 100 டிகிரி வெயில்ஈரோடு: ஈரோடு மாநகரில் நேற்று வெயில் தாக்கம், 38 டிகிரி செல்சியஸாக (பாரன்ஹீட்டில் 100.8 டிகிரி) இருந்தது. வெயில் சுட்டெரித்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பெரும்பாலான சாலைகளில், வாகன நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.

