ரூ.1.50 கோடி மதிப்பிலான
வளர்ச்சி பணிகள் துவக்கம்
கோபி: கோபி அருகே அளுக்குளி மற்றும் கோட்டுப்புள்-ளாம்பாளையம் பஞ்சாயத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், வளர்ச்சி திட்டப்பணிகளை, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார். ஆழ்துளை கிணறு மோட்டார் வசதி திறப்பு, கான்கிரீட் தளம் அமைக்க பூஜை, அங்-கன்வாடி மையம் திறப்பு, தார்சாலை அமைக்க பூமி பூஜை உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். கோபி யூனியன் சேர்மன் மவு-தீஸ்வரன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
காங்கேயம் அருகே நாய்கள்கடித்ததில் 10 ஆடுகள் காயம்
காங்கேயம்: காங்கேயம், ஊதியூர் பகுதிகளில், தெருநாய்-களால் கடிபட்டு ஆடுகள் பலியாவது தொடர்-வதால், விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்-ளனர். இந்நிலையில் காங்கேயம் அருகே வட்ட-மலை சூலைக்கல்புதுாரை சேர்ந்த சின்னசாமிக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் நாய்கள் புகுந்து வெறியாட்டம் போட்டுள்ளன. இதில் ஒரு ஆடு பலியான நிலையில், ௧௦ ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன. நாய்த்தொல்லைக்கு முடிவு கட்ட முடியாத நிலையில், நாய்களால் பலி-யாகும் ஆடுகளுக்கு, இழப்பீடு வழங்க, விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்