ADDED : மே 19, 2026 02:18 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
வெட்டுக்காட்டு வலசில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
குடியிருப்பு கழிவு நீர் குழாயில் சாரை பாம்பு இருப்பதாக கிடைத்த
தகவலின்படி, ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை, 9:00
மணிக்கு சென்றனர். பாம்பை வெளியே கொண்டு வரும் முயற்சியாக,
குழாய்க்குள் அதிகளவில் தண்ணீரை ஊற்றியதால் வெளியே வரவே லாவகமாக
பிடித்தனர்.
இதேபோல் ஈரோடு சூளையில் உள்ள ஜி.எஸ்.டி., அலுவலக
பார்க்கிங் பகுதியில், பாம்பு நடமாட்டம் இருப்பதாக, 10:00 மணிக்கு
தகவல் வரவே அங்கும் விரைந்தனர். ஒரு கல்லின் பின்னால் ஒளிந்திருந்த
பாம்பை சில நிமிடங்களில் பிடித்தனர். இதுவும் சாரை பாம்பு என தெரிந்தது.
