ADDED : ஜூலை 13, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே பழனிக்கவுண்டன்புதுாரை சேர்ந்தவர் தேவேந்திரன், 27, கூலி தொழிலாளி; இவரின் மனைவி தகராறால், சில மாதங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தந்தை மூர்த்தி, மகன் தேவேந்திரனிடம் விபரம் கேட்டுள்ளார்.
அப்போது தந்தையை சுத்தியலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தந்தை புகாரின்படி மகனை, கடத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர்.