ADDED : ஏப் 19, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
அறச்சலுார் : அறச்சலுார், அனுமன்பள்ளி வெட்டுகாட்டு புதுாரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 57; கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். கடந்த, 16ம் தேதி வீட்டில் ஈஸ்வரமூர்த்தி சுய நினைவின்றி கிடந்தார்.
தந்தை சென்னியப்பன், 80, உறவினர்களுடன் சேர்ந்து, ஈஸ்வரமூர்த்தியை பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவ பரிசோதனையில் இறந்து விட்டது தெரிய வந்தது. மகன் இறப்பு குறித்து, சென்னியப்பன் அளித்த புகாரின்படி, அறச்சலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
