ADDED : மே 08, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கவுந்தப்பாடி அருகே, பெருந்தலையூரை சேர்ந்தவர் தர்ஷன், 21. இவர், பெருந்துறையில் உள்ள கல்லுாரியில், பி.இ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஏப்.,21ல் கல்லுாரி சென்ற தர்ஷன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப்பில் இருந்தது தெரியவந்தது. அக்கம்பக்கம்
மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் தந்தை வரதராஜன், 56, கொடுத்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

