ADDED : ஆக 28, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, மகன் மாயமானதாக, கவுந்தப்பாடி போலீசில் தாய் புகாரளித்துள்ளார்.
கவுந்தப்பாடி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் மதியழகன், 25, கூலித்தொழிலாளி; இவர் வேலைக்கு செல்வதாக கூறி, கடந்த ஜூலை, 22ல் வெளியே புறப்பட்டு சென்றார்.
அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் விஜயா, கொடுத்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.