ADDED : நவ 23, 2024 03:16 AM
தாராபுரம்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடியினர் சிறப்பு முகாம், தாராபுரத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு, ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தார். தாசில்தார் திர-வியம் முன்னிலை வகித்த முகாமில், 50க்கும் மேற்பட்ட பழங்கு-டியினருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் நல வாரியத்தில் ஏழு பேர் உறுப்பினர்களாகவும் பதிவு செய்யப்பட்டது. பழங்குடியின-ருக்கு, கோரிக்கை தொடர்பான சான்றிதழ் வழங்கப்பட்டது. தாரா-புரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பல்-வேறு துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
'குட்கா' பொருட்கள் பறிமுதல்தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த எஸ்.காஞ்சிபுரம் அருகே, குண்டடம் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்-தனர். அப்போது டூவீலரில் வந்த அவிநாசிபாளையத்தை சேர்ந்த நாகேந்திரன், 50, என்பவரிடம் இருந்த பையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், 2.5 கிலோ இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

