ADDED : மார் 05, 2024 01:37 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சிறப்பு முகாம், தாளவாடி அரசு பயணியர் மாளிகையில் நாளை நடக்கிறது.
மேலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை, அனைத்து துறை தொடர்பான நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (நீல நிறம்), ஆதார் அட்டை, புகைப்படம் - 2 ஆகியவற்றுடன் பங்கேற்று பயன் பெறலாம்.
